Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

By: vaithegi Sun, 21 Aug 2022 4:46:21 PM

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

சென்னை :தமிழகத்தில் மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எனவே அதன்படி 21.08.2022 மற்றும்‌ 22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.23.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மமை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தார்‌, திருப்பூர், திண்டுக்கல் மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், திண்டுக்கல் மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இதையடுத்து 25.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்கா, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

heavy rain,weather center ,கனமழை,வானிலை மையம்

மேலும் சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 21.08.2022: தமிழக கடலோரப்பகுஇகள்‌, குமரிக்கடல்‌ பகுஇகள்‌, மன்னார்‌ வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. 22.08.2022: தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல்‌ பகுதிகள், மன்னார்‌ வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :