கனமழை ... இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
By: vaithegi Tue, 01 Nov 2022 10:57:44 AM
சென்னை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை ..... சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துகொண்டு வருகின்றது. சென்னையில் நேற்று அதிகாலையில் இருந்து மிதமான மழை பெய்தது. இதனையடுத்து அதன் பின்னர் மாலை 5 மணிக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது.
மேலும் இதே போன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இன்று அந்த மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தொடர் கனமழையின் காரணமாக மேலும் தஞ்சாவூர், திருவாரூர் ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.