சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை
By: Monisha Thu, 12 Nov 2020 12:00:31 PM
சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மழை அதிகளவு பெய்து வருகிறது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த வாரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சியால் நேற்று தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று தியாகராய நகர், மேற்கு மாம்பலம், கிண்டி, மீனம்பாக்கம், குரோம்பேட்டையில் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், ஆலந்தூர், பம்மல், அண்ணா நகர், அடையார், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, புரசைவாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், ராமாபுரம், மதுரவாயல், பூந்தமல்லி, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர், பொன்னேரி, சோழவரம், செம்பரம்பாக்கம், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தீபாவளி கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் திரும்பும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.