Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு ... வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு ... வானிலை ஆய்வு மையம்

By: vaithegi Mon, 31 Oct 2022 10:43:11 AM

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு   ...  வானிலை ஆய்வு மையம்

சென்னை: கன மழை பெய்ய வாய்ப்பு .... தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டிய தென் இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. அதேபோல நெல்லையில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்திலும் பல இடங்களில் மிதமான மழை பெய்தது.

இதையடுத்து சென்னையில் இன்று அதிகாலை முதற் கொண்டு பல இடங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.

meteorological center,heavy rain ,வானிலை ஆய்வு மையம் ,கன மழை

இன்று தமிழ்நாட்டில் திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை மையக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து திருவண்ணாமலை, விழுப்புரம் ,கடலூர் ,நாகப்பட்டினம் ,திருவாரூர் ,தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :