தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு என அறிவிப்பு
By: Nagaraj Mon, 24 July 2023 7:38:27 PM
சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (24.07.2023) ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும்.
நாளை (25.07.2023) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
26.07.2023 முதல் 30.07.2023 வரை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அவ்வாறு கூறுகிறது.