இன்னும் 7 நாட்களுக்கு கொட்டித்தீர்க்க போகும் கனமழை
By: vaithegi Mon, 31 July 2023 4:05:42 PM
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும், கடந்த 2 நாட்களாக மழையின் அளவு சற்று குறைந்து நகரின் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 41.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. ஆனாலும், 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.
மேலும், இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைப்பொழிவு இருந்து வந்தாலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கூடுதலான வெப்பம் இருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, தென்தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.