Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 2 நாளைக்கும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ... வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

தமிழகத்தில் 2 நாளைக்கும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ... வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

By: vaithegi Fri, 14 Oct 2022 3:29:25 PM

தமிழகத்தில் 2 நாளைக்கும்  26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ...  வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை: கனமழை பெய்ய வாய்ப்பு ... தமிழகத்தில் 2 தினங்களுக்கு 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.

heavy rain,chennai ,கனமழை ,சென்னை

இதை தெடர்ந்து தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி

மேலும் திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :