Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக கடலோரப் பகுதிகளில் இந்த தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோரப் பகுதிகளில் இந்த தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By: vaithegi Thu, 17 Nov 2022 08:51:22 AM

தமிழக கடலோரப் பகுதிகளில் இந்த தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கனமழைக்கு வாய்ப்பு .... வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பருவமழை வெளுத்து வாங்கியது. சென்னை மாநகரம் இந்த மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழையினால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. இந்த காற்றழுத்தத்தினால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை, அதிக கன மழை பெய்தது . டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது.

heavy rain,coastal area ,கனமழை,கடலோரப் பகுதி

இதையடுத்து இந்த நிலையில், வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறனது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் அதை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 19,20,21 தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம். தெரிவித்திருக்கிறது.

Tags :