Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

இந்த 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

By: vaithegi Sun, 23 Apr 2023 3:49:56 PM

இந்த 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு ..  வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , “தமிழகப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

meteorological centre,kanamagh ,வானிலை ஆய்வு மையம்,கனமழை

மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வரை ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்” என அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Tags :