Advertisement

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Sat, 22 Apr 2023 2:58:30 PM

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

சென்னை : சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக இன்று தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாளை தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

rainfall,tamil nadu,puducherry,karaikal ,கனமழை , தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால்

அந்த வகையில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது

மேலும் வருகிற 24 முதல் 26-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புற நகர் பகுதியில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று அதில் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Tags :