வருகிற ஜூலை 25 ஆம் தேதி மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பு
By: vaithegi Fri, 21 July 2023 11:15:00 AM
மகாராஷ்டிரா: இந்தியாவின் தலைநகர் மும்பையில் கடந்த வாரம் கனமழை பெய்தது. அதனால் அம்மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் பிற பகுதிகளில் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.
மேலும் அது மட்டுமில்லாமல் மகாராஷ்டிராவில் சில பகுதிகளில் வருகிற ஜூலை 26 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதனால் மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை நீடிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
மேலும் அந்த பகுதியில் அவ்வப்போது 50 முதல் 60கி.மீ வேகத்தில் காற்று வீச சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் அடுத்த 48 மணி நேரத்திற்கு, மும்பை நகரம் மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனை அடுத்து அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 27 டிகிரி செல்சியஸ் மற்றும் 24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.