Advertisement

கேரளாவில் வருகிற 9-ந் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு

By: vaithegi Thu, 07 July 2022 12:34:02 PM

கேரளாவில் வருகிற 9-ந் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது.

heavy rain,kerala ,கனமழை ,கேரளா

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கேரளாவில் வருகிற 9-ந் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாகவும், மலையோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :