தமிழகத்தில் கனமழை அக்டோபர் 9 ஆம் தேதி வரை நீடிக்கலாம்
By: vaithegi Tue, 03 Oct 2023 3:43:25 PM
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து 3 வாரங்களாக மழை பெய்து கொண்டு பெறுகிறது. இதையடுத்து இவ்வாறு, இடைவிடாது மழை பெய்வதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த கனமழை வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி வரை நீடிக்கலாம் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதற்கு இடையே, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 37.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, இன்றும் நாளையும் தென்தமிழக கடலோர பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.