டெல்லியில் இரவு முதல் இடி மின்னலுடன் கனமழை
By: Karunakaran Tue, 21 July 2020 10:33:42 AM
வட இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பரவமழை காலம் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், பீகார், அசாம், டெல்லி போன்ற பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பீகார், அசாம் மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தற்போது, தலைநகர் டெல்லியின் ராஜ்பாத், மொடிபாத் போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு முதலே பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு வெப்பம் தணிந்துள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் உள்ளது. கொரோனா நேரத்தில் வீட்டிலே முடங்கியிருக்கும் மக்களுக்கு தற்போது குளுமையான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
டெல்லியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.