- வீடு›
- செய்திகள்›
- இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு
இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு
By: vaithegi Mon, 03 Oct 2022 4:40:38 PM
சென்னை: தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதனையடுத்து அதன்படி, மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி உருவாகியுள்ளது.
இதனால் இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலை தமிழகத்தில் பரவலாக வரும் அக்டோபர் 7ம் தேதி வரை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச பட்ச மழை அளவு கன்னியாகுமரி மாவட்டத்திலும், குறைந்த பட்ச மழை அளவு மதுரையிலும் பதிவாகியுள்ளது.
மேலும், வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சூறாவளி காற்று வீசுகிறது. இதனால் வரும் 6ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.