Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம், புதுவையில் வரும் 14ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் .. வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுவையில் வரும் 14ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் .. வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Mon, 10 Oct 2022 3:32:57 PM

தமிழகம், புதுவையில் வரும் 14ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் ..   வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வரும் 14ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை ... இன்று ஈரோடு, கோயம்புத்தூர்‌, நாமக்கல்‌, திருச்‌சிராப்பள்ளி, மதுரை, விழுப்புரம்‌, அரியலூர்‌, கடலூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ கள்ளக்குறிச்‌சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்யும்.

இதனை அடுத்து அதே போன்று நீலகிரி, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, சேலம்‌, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, சிவகங்கை கரூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

meteorological centre,tamil nadu,puducherry ,வானிலை ஆய்வு மையம்,தமிழகம், புதுவை


அதனை தொடர்ந்து அக்.11ம் தேதி (நாளை) நீலகிரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர்‌, திருச்‌சிராப்பள்ளி, தேனி, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, மதுரை, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி மற்றும்‌ திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் அக். 12 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. காஞ்சிபுரம்‌, நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, திருவள்ளூர்‌, வேலூர்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌ மற்றும்‌ இராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் அடுத்தாக அக்.13,14-ம் தேதிகளில் தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணூரி, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர்‌, இராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் எனவும் அறிவித்துள்ளது.

Tags :