தமிழகத்தில் செப்.11 வரை இடி, மின்னலுடன் கனமழை பொழியுமாம்
By: vaithegi Thu, 07 Sept 2023 4:44:42 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேர நிலவரத்தின்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனை அடுத்து தஞ்சாவூரில் அதிகபட்ச வெப்பநிலை 37.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 11 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இன்று முதல் 11ம் தேதி வரை வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில்
வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு சொல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மழை நாட்களில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.