Advertisement

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் நேற்று மாலை கனமழை

By: Nagaraj Fri, 28 July 2023 10:02:52 AM

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் நேற்று மாலை கனமழை

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நேற்று மாலை ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது.

farmers,kuruai cultivation,coconut trees,heavy rains,perawoorani ,விவசாயிகள், குறுவை சாகுபடி, தென்னை மரங்கள், கனமழை, பேராவூரணி

இந்த நிலையில் மாலையில் மழை பெய்தது. பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 6 மணி வரை தொடர்ந்து 1 மணி நேரம் பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

இந்த மழையால் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் இந்த மழை பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடிக்கும், தென்னை மரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :