Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு

எட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு

By: Nagaraj Sat, 30 July 2022 3:35:31 PM

எட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு

சென்னை: பலத்த மழைக்கு வாய்ப்பு... தமிழகத்தில் சனிக்கிழமை 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சனிக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

heavy rain,thanjavur,tiruvarur,ariyalur,cuddalore,districts ,
பலத்த மழை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கடலூர், மாவட்டங்கள்

சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூா், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கரூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா், மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :