- வீடு›
- செய்திகள்›
- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்
By: vaithegi Tue, 18 Oct 2022 3:40:23 PM
சென்னை: தமிழ்நாடில் இன்று கன்னியாகுமரி, தென்காசி, தர்மபுரி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி , சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதை தொடர்ந்து நாளை (அக்.19) திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது ஏன் அறிவித்துள்ளது.
மேலும் அக்டோபர் 20ம் தேதி நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, பெரம்பலூர், கன்னியாகுமரி, சிவகங்கை, திருச்சராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, அரியலூர், கரூர், கடலூர், சேலம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம்,
இதையடுத்து கள்ளக்குறிச்சி, நாமக்கல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.