தொடரும் கனமழை .. பஞ்சாபில் ஜூலை 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
By: vaithegi Tue, 11 July 2023 11:55:46 AM
பஞ்சாப் : மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை கொட்டி தீர்த்து கொண்டு வருகிறது. எனவே இதன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ..
கோடைகால முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது. இதையடுத்து நேற்று (ஜூலை.09) இமாசல பிரதேசம், டெல்லி , பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக பஞ்சாபில் பெய்து வரும் கனமழையால் ஆறு, குளங்கள் நிரம்பி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் பள்ளி மாணவர்கள் மனதை கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் வருகிற ஜூலை 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபை தொடர்ந்து அதன் அண்டை மாநிலங்களான டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.