Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இமாச்சல பிரதேசத்தில் கனமழை வெள்ளதால் மக்கள் வெகுவாக பாதிப்பு

இமாச்சல பிரதேசத்தில் கனமழை வெள்ளதால் மக்கள் வெகுவாக பாதிப்பு

By: Nagaraj Wed, 12 July 2023 5:36:39 PM

இமாச்சல பிரதேசத்தில் கனமழை வெள்ளதால் மக்கள் வெகுவாக பாதிப்பு

இமாச்சலபிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் 48 மணிநேரத்தில் 20 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற காரணங்களால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மின்கம்பங்கள் சாய்ந்து பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இந்த நிலையில், மேலும் 3 நாட்கள் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகள் முனைப்புடன் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார்.
கனமழையால் இதுவரை சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|