Advertisement

கேரளா மாநிலத்தில் அதிதீவிரமாய் பொழியும் கனமழை

By: vaithegi Mon, 16 Oct 2023 3:45:50 PM

கேரளா மாநிலத்தில் அதிதீவிரமாய் பொழியும் கனமழை


கேரளா : கேரளாவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வெள்ளத்தால் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் கேரளாவில் உள்ள பல்வேறு பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், வெள்ளத்தால் சூழ்ந்த பகுதிகளை முதல்வர் நேரில் பார்வையிட்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

heavy rain,kerala ,கனமழை ,கேரளா

இந்த நிலையில், அடுத்த 5நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதனால் ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

இதற்கு இடையே, மாநிலத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மீதம் உள்ள மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கனமழை காரணத்தினால் மரம் வேரோடு சாய்வது, வீடு இடிந்து விழுவது உள்ளிட்ட சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags :