Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயல் எதிரொலியால் சென்னையின் பல பகுதிகளில் கனமழை

நிவர் புயல் எதிரொலியால் சென்னையின் பல பகுதிகளில் கனமழை

By: Nagaraj Tue, 24 Nov 2020 09:44:59 AM

நிவர் புயல் எதிரொலியால் சென்னையின் பல பகுதிகளில் கனமழை

நிவர் புயல் எதிரொலி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், அனகாபுத்தூர், கோட்டூர்புரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

heavy rain,normal life,heavy rain,low pressure,nivar storm ,கனமழை, இயல்பு வாழ்க்கை, கனமழை, காற்றழுத்த தாழ்வு, நிவர் புயல்

அசோக் நகர், கோடம்பாக்கம், குரோம்பேட்டை, மேற்கு மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி நாளை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது.

இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags :