புயல் கரையை கடந்தாலும் இந்த மாவட்டங்களில் கனமழை தொடரும்
By: vaithegi Sat, 10 Dec 2022 11:18:22 AM
சென்னை: கனமழை தொடரும் .. மாண்டஸ் புயலினால் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. காட்டுப்பாக்கத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. நுங்கம்பாக்கம் , பூந்தமல்லி , புழல் பகுதிகளில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. காஞ்சிபுரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது .
இதனை அடுத்து புயல் கரையை கடந்து சென்று விட்டாலும் கூட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. உள் மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையில் பெய்த கனமழையினால் சென்னை அண்ணா சாலை , திருவல்லிக்கேணி, குரோம்பேட்டை, வடபழனி பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் மழையினால் இருள் சூழ்ந்திருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்டு ஒட்டி செல்கின்றர். சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி இருக்கின்றன.