Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மலைப்பிராந்திய மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு... மக்கள் முடங்கினர்

மலைப்பிராந்திய மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு... மக்கள் முடங்கினர்

By: Nagaraj Sat, 21 Jan 2023 09:46:09 AM

மலைப்பிராந்திய மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு... மக்கள் முடங்கினர்

புதுடெல்லி: மலைப்பிராந்திய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடும் குளிர் வாட்டி வருகிறது. காலை நேரங்களில் கடுமையான பனிமூட்டம் இருப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற வட மாநிலங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை நாளுக்கு நாள் சரிந்து கொண்டே போனதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன. இந்நிலையில் இமயமலை பிராந்தியங்களில் அமைந்துள்ள உத்தரகாண்ட், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு தொடங்கி இருக்கிறது.

Tags :