Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோட்டாட்சியர் விசாரணைக்கு பின்னர் ஹேம்நாத் புழல் மத்திய சிறைக்கு மாற்றம்

கோட்டாட்சியர் விசாரணைக்கு பின்னர் ஹேம்நாத் புழல் மத்திய சிறைக்கு மாற்றம்

By: Nagaraj Fri, 18 Dec 2020 09:31:00 AM

கோட்டாட்சியர் விசாரணைக்கு பின்னர் ஹேம்நாத் புழல் மத்திய சிறைக்கு மாற்றம்

புழல் சிறைக்கு மாற்றம்... சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரித்த நசரத்பேட்டை போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்து பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.

hemnath,pulhal jail,change,ponneri branch jail ,ஹேம்நாத், புழல் சிறை, மாற்றம், பொன்னேரி கிளை சிறை

முன்னதாக, திருமணமாகி இரண்டே மாதங்களில் சித்ரா தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து ஹேம்நாத்திடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

கோட்டாட்சியர் விசாரணை முடிந்து நேற்று மாலை பொன்னேரி கிளைச்சிறைக்கு கொண்டு வரப்பட்ட ஹேம்நாத் அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

Tags :
|