Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை பவர் நிறுத்தம் ஏற்படவுள்ள பகுதிகள் விவரங்கள் இதோ

நாளை பவர் நிறுத்தம் ஏற்படவுள்ள பகுதிகள் விவரங்கள் இதோ

By: vaithegi Sun, 04 June 2023 2:03:16 PM

நாளை பவர் நிறுத்தம் ஏற்படவுள்ள பகுதிகள் விவரங்கள் இதோ

சென்னை: நாளை நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை அறிவிப்பு .... தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் மின் கசிவு மற்றும் மின் துண்டிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றன.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் நடைபெறும் துணை மின் நிலைய பராமரிப்பு பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக மின்வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

power outage,interruption of power supply , பவர் நிறுத்தம், மின் விநியோகம் தடை

இதனை அடுத்து நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பச்சாம்பாளையம், பரமசிவம் பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்கு பாளையம், காளம்பாளையம், ஊஞ்சபாளையம், புது ஊஞ்சபாளையம் ஆகிய பகுதிகளிலும்

அதனைத்தொடர்ந்து குபாண்டம் பாளையம், துலுக்க முத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக் கவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி பகுதி, எஸ் எஸ் நகர், வீதிக்காடு முட்டியங்கிணறு, திருமலை நகர்,சிட்கோ, பெ.அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அவிநாசி துணை மின் நிலைய சொற்பொழிவாளர் பரஞ்சோதி அவர்கள் அறிவித்திருக்கிறார்.

Tags :