மின் பராமரிப்பு பணி .. நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் விவரங்கள் இதோ
By: vaithegi Tue, 27 June 2023 3:48:33 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதையடுத்து இந்த பணிகளின் போது மின் பயனர்கள் மற்றும் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இந்த மின் பராமரிப்பு பற்றி மின் வாரிய இணையதளத்தில் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகிவுள்ளது.
எனவே அதன்படி நாளை பெரியார் நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் தண்ணீர் பந்தல்,
இதனை அடுத்து செம்மண்டம்பாளையம், ஜெகத்குரு, தங்கமேடு ஊட்டி, செங்காளிப்பாளையம் ஊட்டி, தீத்தம்பாளையம், புதுப்பை ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.