நாளை மின் விநியோகம் தடை ஏற்படவுள்ள பகுதிகள் விவரங்கள் இதோ
By: vaithegi Sun, 23 July 2023 6:16:10 PM
சென்னை: நாளை பெருங்களத்தூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை ... தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் எந்தெந்த பகுதிகளில் உள்ள மின் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுகிறதோ அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை அறிவிக்கப்படுகிறது.
மேலும், தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் பல்வேறு பகுதிகளில் மின்கசிவு மற்றும் மின் துண்டிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்து கொண்டு வருகின்றனர். இதனால் மின் துறை ஊழியர்கள் இரவும், பகலுமாக தொடர்ந்து பணியாற்றி கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நாளை பெருங்களத்தூர் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுவதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, கலைஞர் நெடுஞ்சாலை- 1 முதல் 7வது தெரு, சிவசங்கர் செயின்ட், சூரத்தம்மன் கோயில் ஸ்டம்ப், அம்மன் கோயில் தெரு, கலைவாணி செயின்ட், அர்ச்சுனா நகர், கண்ணதாசன் தெரு, டிகேசி தெரு, மணிமேகலை தெரு, உமா நகர், வளையாபதி எஸ் ஆகிய பகுதிகளுக்கு நாளை மின்சாரம் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.