நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்கல் இதோ
By: vaithegi Mon, 31 July 2023 3:13:41 PM
சென்னை: தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மின்வாரியம் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு வருகிறது. இந்த பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து இது பற்றி அந்தந்த பகுதி மின் வரியா செயற்பொறியாளர்கள் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகின்றனர். அந்த வகையில் நாளை திருத்தணியில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
அதன்படி திருத்தணியில் உள்ள முருகன் கோயிலில் அடி கார்த்திகை விழாவை முன்னிட்டு சீரான மின்சாரம் வழங்கும் நோக்கில் திருத்தணி நகரத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்படவுள்ளது. அதனால் நல்லான்குளம், மேல் திருத்தணி, முருகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்,
மேலும் சேகர் வர்மா நகர், காமராஜ் நகர், வாரியார் நகர், பெரியார் நகர், அண்ணாமலை நகர், வெற்றிவேல் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் சாரம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.