Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உரிமைத்தொகை திட்டத்தில் பணம் கிடைக்கா விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள் இதோ

உரிமைத்தொகை திட்டத்தில் பணம் கிடைக்கா விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள் இதோ

By: vaithegi Tue, 03 Oct 2023 3:43:32 PM

உரிமைத்தொகை திட்டத்தில் பணம் கிடைக்கா விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள் இதோ

சென்னை: உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கு வந்த அப்டேட் ... தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் வராதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் விண்ணப்பிக்கும் போது கள ஆய்வு என காட்டுவதால் அவர்களால் மேல்முறையீடு செய்ய முடியவில்லை.

இதையடுத்து அவர்களுக்கு வழிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது உரிமைத் தொகை பெறாத மக்கள் விண்ணப்பத்தின் நிலை பற்றி அறிய இணையத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால், பரிசீலனையில் உள்ள விண்ணப்பம் கள ஆய்வுக்குப் பின் முடிவு செய்யப்படும்..

instructions,royalty ,வழிமுறைகள் ,உரிமைத்தொகை

அதனால் அவர்கள் இணையத்தில் மேல்முறையீடு செய்ய முடியவில்லை. தற்போது மேல்முறையீடு செய்ய 12 நாட்கள் மட்டுமே இருப்பதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

அந்த வகையில் இணையத்தில் கள ஆய்வு என்று காட்டி மேல்முறையீடு செய்ய முடியாதவர்கள் கோட்டாட்சியரிடம் நேரடியாக மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :