Advertisement

நாளைய மின்தடை பகுதிகள் குறித்த விவரம் இதோ

By: vaithegi Fri, 11 Aug 2023 3:09:05 PM

நாளைய  மின்தடை  பகுதிகள் குறித்த விவரம் இதோ

சென்னை: தூத்துக்குடி, பெருந்துறை உள்ளிட்ட இடங்களில் உள்ள துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் ...தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மின்வாரியம் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. .

இதையடுத்து இந்த பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை பெருந்துறை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மேலும் விஜயமங்கலம் பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage,electrical maintenance work ,மின்தடை  ,மின் பராமரிப்பு பணி

அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், ராமசாமிபுரம், புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கள்ளன் பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேல தட்டப்பாறை ஆகிய பகுதிகளிலும்

மேலும் கீழதட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :