இந்தாண்டு அர்ஜுனா விருதுக்கு ஷிகா பாண்டே, தீப்தி சர்மா பெயர்களை பரிந்துரைக்க முடிவு
By: Nagaraj Tue, 12 May 2020 9:13:31 PM
இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஷிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோரின் பெயர்களை பரிந்துரை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது,
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, மற்றுமு கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஷிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோரின் பெயர்களை பரிந்துரை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.