கழிவறையில் ரகசிய கேமரா; பள்ளி நிர்வாகம் மீது ஆசிரியர்கள் புகார்
By: Nagaraj Fri, 25 Sept 2020 8:28:48 PM
பள்ளி நிர்வாகத்தின் அடாவடி செயல்... உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பள்ளி நிர்வாகம், பள்ளி செயலாளர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதில் ஆசிரியர்கள் கூறியிருக்கும் காரணம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்பள்ளி ஆசிரியர்களுக்கு பல மாதங்களாக பள்ளி நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் உள்ள கழிவறையில் நிர்வாகத்தினர் ரகசிய கேமிரா பொருத்தியுள்ளனர். பின்னர் ஆசியர்கள் கழிப்பறைக்குச் சென்றபோது அவர்களுக்கேத் தெரியாமல், சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்திருக்கின்றனர்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்துக் கொண்டு ஆசிரியர்களை மிரட்டியுள்ளனர். சம்பளம் கொடுக்குமாறு கேட்கும் போதெல்லாம் மிரட்டி, சம்பளம் கொடுக்காமலேயே வேலை செய்ய வைத்திருக்கிறார் பள்ளி நிர்வாகக் குழு செயலாளர்.
நீண்ட நாட்களாக இப்படியே செல்ல இதைப் பொறுத்துக் கொள்ளமுடியாததால்
ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து
போலீஸார் பள்ளிக்குச் சென்று சோதனை செய்தபோது பெண்கள் கழிப்பறையில் எந்த
ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் ஆண்கள் கழிப்பறையில் சிசிடிவி கேமிராவை
வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா
ஊரடங்கு காலத்தில் சம்பளம் கொடுக்க முடியாததால் இவ்வாறு செய்ததாக, பள்ளி
செயலாளர் குற்றத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார். பின்னர் பள்ளி செயலாளர்
மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.