Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய வைத்திசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திர சிகிச்சை கருவிகள் கண்டுபிடிப்பு

தேசிய வைத்திசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திர சிகிச்சை கருவிகள் கண்டுபிடிப்பு

By: Nagaraj Thu, 29 June 2023 7:46:55 PM

தேசிய வைத்திசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திர சிகிச்சை கருவிகள் கண்டுபிடிப்பு

கொழும்பு: சத்திர சிகிச்சை கருவிகள் கண்டுபிடிப்பு... கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கோபா குழுவின் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கூட்டத்தின் போது, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

health,authorities,criminal investigation,facts ,சுகாதாரத்துறை, அதிகாரிகள், குற்றப்புலனாய்வு, உண்மைகள்

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எனவே, சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணரும் பணியை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|