Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்2 மனுவை தள்ளுபடி செய்தது

உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்2 மனுவை தள்ளுபடி செய்தது

By: vaithegi Thu, 19 Oct 2023 12:15:19 PM

உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்2 மனுவை தள்ளுபடி செய்தது

சென்னை:செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவிப்பு ... சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். செந்தில் பாலாஜி தரப்பில், ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கையை சுட்டிக்காட்டி, மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், நீதிமன்றமே ஒரு மருத்துவரை நியமித்து செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் வாதிடப்பட்டது. வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் 10 ஆண்டுகளில் அவருடைய வங்கி கணக்குகளையும், வருமான வரி கணக்கிலிருந்தும், அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமாவதாகவும், உள் நோக்கத்துடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

bail petition,deferred,high court,minister senthil balaji ,ஜாமீன் மனு,தள்ளுபடி ,உயர் நீதிமன்றம் ,அமைச்சர் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜி அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி, வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜி, ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் காட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது.

Tags :