- வீடு›
- செய்திகள்›
- அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .. உயர்கல்வித்துறை
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .. உயர்கல்வித்துறை
By: vaithegi Thu, 22 June 2023 3:04:19 PM
சென்னை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வருகிற ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இதையடுத்து நேற்று வரை 77,984 மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்துஉ ள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம் எனவும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.
கல்லூரிகளில் இருக்கக்கூடிய இடங்கள் போதுமானதாக இல்லை என்பதினால் அதிகரிக்கப்படுகிறது என்றார். மேலும், சுயநிதி கல்லூரிகளில் 10% இடங்களை அதிகரிக்கலாம். திருச்சி பெரியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் ரத்து என்பது தவறான தகவல் என்றும் கூறினார்.
இதற்கு இடையே, தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை 3-ம் தேதி திறக்கப்படும் என்று நேற்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.