Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .. உயர்கல்வித்துறை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .. உயர்கல்வித்துறை

By: vaithegi Thu, 22 June 2023 3:04:19 PM

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  ..  உயர்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வருகிற ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இதையடுத்து நேற்று வரை 77,984 மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்துஉ ள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம் எனவும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

department of higher education,govt arts and science college ,உயர்கல்வித்துறை ,அரசு கலை, அறிவியல் கல்லூரி


கல்லூரிகளில் இருக்கக்கூடிய இடங்கள் போதுமானதாக இல்லை என்பதினால் அதிகரிக்கப்படுகிறது என்றார். மேலும், சுயநிதி கல்லூரிகளில் 10% இடங்களை அதிகரிக்கலாம். திருச்சி பெரியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் ரத்து என்பது தவறான தகவல் என்றும் கூறினார்.

இதற்கு இடையே, தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை 3-ம் தேதி திறக்கப்படும் என்று நேற்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :