- வீடு›
- செய்திகள்›
- இந்த தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் ... உயர்கல்வித்துறை தெரிவிப்பு
இந்த தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் ... உயர்கல்வித்துறை தெரிவிப்பு
By: vaithegi Wed, 21 June 2023 1:22:54 PM
சென்னை: ஜூன் 30ம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் .. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை 75,811 மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் .
இதையடுத்து இது பற்றி உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது ,
"தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலைக் கல்லூரிகளில் மொத்தம் 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதுவரை மட்டும் 75811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் (Rule of Reservation) மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டு வருகிறது.
வருகிற ஜுன் 30, 2023 வரை முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும். முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி 2023 ஜூலை 3 -ம் தேதி முதல் தொடங்கப்படும்" என அதில் குறிப்பிட்ட உள்ளது.