கல்லீரல் பாதிப்பால் இந்தி இயக்குனர் நிஷிகாந்த் காமத் காலமானார்
By: Nagaraj Mon, 17 Aug 2020 9:19:02 PM
கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்தி இயக்குநர் நிஷிகாந்த் காமத் (50) இன்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்தி திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மலையாளத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற த்ரிஷ்யம் படத்தை இந்தியில் ரீமேக் செய்தவர் இயக்குநர் நிஷிகாந்த் காமத். இவர் சில நாட்களுக்கு முன்பு கல்லீரல் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறப்பை மருத்துவமனை நிர்வாகம் உறுதி
செய்துள்ளது.
மாலை அவர் உயிரிழந்ததாக தெரிவித்து உள்ளது. நிஷிகாந்த் காமத் இயக்குநர்
மட்டுமல்ல. தயாரிப்பாளரும்கூட. இந்தி மற்றும் மராத்திமொழி திரைப்படங்களை
தயாரித்துள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
இயக்குநர் நிஷிகாந்த் காமத்தின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்