Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Fri, 17 Feb 2023 3:13:53 PM

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்: இந்தாண்டு மகா சிவராத்திரி நாளை பிப்ரவரி 18-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மகாசிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

இதையடுத்து அன்றையதினம், இரவு கண்விழித்து சிவனை வணங்கினால் நன்மை கிடைக்கும் என்பார்கள். ஆகையால் மகாசிவராத்திரி அன்று கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படும்.

எனவே இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ( பிப்-18) விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

holiday,thiruvarur ,விடுமுறை ,திருவாரூர்

இதற்கு முன்னதாக மழையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் விதமாக நாளை ( சனிக்கிழமை ) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நாளை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :