பாடசாலைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
By: Nagaraj Fri, 26 May 2023 8:43:03 PM
கொழும்பு: 2 வாரங்கள் விடுமுறை... 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் ஜூன் 11 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான மூன்றாம் கட்டப் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜூன் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சாதாரண தரப் பரீட்சை 29 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Tags :
school |