Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் ஜூலை 10ம் தேதி வரை நகர்ப்புற பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இலங்கையில் ஜூலை 10ம் தேதி வரை நகர்ப்புற பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Wed, 29 June 2022 11:34:13 AM

இலங்கையில் ஜூலை 10ம் தேதி வரை நகர்ப்புற பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இலங்கை: நாடு தழுவிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற முக்கிய நகரங்களிலும் உள்ள பள்ளிகளும் அடுத்த 2 வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து நகர்ப்புற பள்ளிகளுக்கும் வரும் ஜூலை மாதம் 10ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

holidays,urban schools ,விடுமுறை ,நகர்ப்புற பள்ளிகள்

அதாவது, நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் எரிபொருட்கள் அளிக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் சமையல் எரிவாயு விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு விலை குறைப்பு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர இலங்கையில் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :