Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் ஜூலை 4 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

இலங்கையில் ஜூலை 4 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Mon, 04 July 2022 11:14:20 AM

இலங்கையில் ஜூலை 4 முதல் அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை அறிவிப்பு

இலங்கை: இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், ஜூலை 4 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன, இலங்கையில் ஜூன் 18 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் ஒரு வாரத்திற்கு மூடுவதாக இலங்கை அரசு அறிவித்தது. தொடர்ந்து இந்த விடுமுறைகள் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நீடித்த மின்வெட்டு காரணமாக கொழும்பு நகர எல்லையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் பிற மாகாணங்களில் உள்ள மற்ற முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகள் அடுத்த வாரத்திலும் மூடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

holiday,sri lanka ,விடுமுறை ,இலங்கை,

இதனால் இலங்கை கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடன் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வார நாட்களில் ஆன்லைன் கற்பித்தலுக்கு வசதியாக காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புக்கொண்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


Tags :