Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் வருகிற ஆக.29, 30 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

தெலுங்கானாவில் வருகிற ஆக.29, 30 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

By: vaithegi Thu, 10 Aug 2023 11:50:44 AM

தெலுங்கானாவில் வருகிற ஆக.29, 30 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

தெலுங்கானா : தெலுங்கானா மாநிலத்தில் 783 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 தகுதித் தேர்வு வருகிற ஆகஸ்ட் 29 -ஆம் மற்றும் 30- ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதையடுத்து கிட்டத்தட்ட 783 காலி பணியிடங்களுக்கு மொத்தமாக 5,51,943 பேர் விண்ணப்பித்து உள்ளதாக மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் (TSPSC) அறிவித்திருக்கிறது. மேலும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் தான் குரூப் 2 தேர்விற்கு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

telangana holiday group 2 qualifying exam ,தெலுங்கானா ,விடுமுறை,குரூப் 2 தகுதித் தேர்வு

எனவே, வருகிற ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய 2 நாட்களும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

இதனையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வுக்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் ஸ்ரீ தேவசேனா உத்தரவிட்டு உள்ள நிலையில் பள்ளிகளில் தற்போதையிலிருந்து குரூப் 2 தேர்வுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags :