Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழை .. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை

கனமழை .. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 01 Sept 2022 11:36:59 AM

கனமழை  ..  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது.இதை தொடர்ந்து கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கனமழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை இடி மற்றும் மின்னலுடன் பெய்யும் என கூறப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் உடல் நலத்தின் மீது அக்கறை கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறையை அளித்து கொண்டு வருகிறது.

nagapattinam,tiruvarur,thanjavur,mayiladuthurai,kanamaha ,நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ,மயிலாடுதுறை ,கனமழை

அதன் படி இன்று பரவலாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் தமிழகத்தின் 4 மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதை அதிகாரப்பூர்வமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :