Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆயுதபூஜையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு அக்.24 ஆம் தேதி வரை விடுமுறை

ஆயுதபூஜையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு அக்.24 ஆம் தேதி வரை விடுமுறை

By: vaithegi Sat, 21 Oct 2023 4:10:26 PM

ஆயுதபூஜையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு அக்.24 ஆம் தேதி வரை விடுமுறை

சென்னை: தமிழகத்தில் ஆயுதபூஜை நாளை நாள் மற்றும் செவ்வாய்க்கிழமை விஜயதசமி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து மொத்தமாக 4நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த நிலையில், ஆயுதபூஜையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரையிலும் தொடர்ந்து 4நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதே நேரத்தில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

holidays,holidays,special classes ,விடுமுறை ,விடுமுறை , சிறப்பு வகுப்புகள்

ஆயுதபூஜை விடுமுறை முடிவடைந்து வருகிற அக்.25 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அக்.27 ஆம் தேதி வரையிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு திரும்பும் பயணிகளின் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ள மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கூட்டம் மிகவும் அலைமோதி கொண்டிருக்கிறது.

Tags :