Advertisement

இல்லம் தேடி கல்வி திட்டம்..நற்செய்தி..

By: Monisha Fri, 08 July 2022 8:57:14 PM

இல்லம் தேடி கல்வி திட்டம்..நற்செய்தி..

தமிழ்நாடு: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இரண்டு இலட்சமாவது மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலை மாவட்டம், ஆராஞ்சி ஊராட்சியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இரண்டு இலட்சமாவது மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மாவட்டம், ஆராஞ்சி ஊராட்சியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இரண்டு இலட்சமாவது மையத்தை தொடங்கி வைத்தார்.

programme,education,free,teaching ,இல்லம், தேடி, கல்வி,திட்டம்,

இத்திட்டத்தில், தன்னார்வலர்களின் கல்வித் தகுதி‌, ஆர்வம், குழந்தைகளைக் கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தன்னார்வலர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மேலும், வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கத்தில் 1000 இல்லம் தேடிக் கல்வி மைய நூலகங்கள் தொடங்கப்பட்டன.

ஒவ்வொரு நாளும் மாலை ஒன்றரை மணி நேரம் மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் நடைபெறுகின்றன. இதன்மூலம், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் உறுதி செய்வதில் இல்லம் தேடிக் கல்வி பேருதவி புரிகிறது.

Tags :
|