Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் 1 ஆண்டுகளுக்கு தள்ளிவைப்பு

ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் 1 ஆண்டுகளுக்கு தள்ளிவைப்பு

By: Karunakaran Sun, 02 Aug 2020 3:30:44 PM

ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் 1 ஆண்டுகளுக்கு தள்ளிவைப்பு

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை சீனா அமல்படுத்தியதன் மூலம், ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளலாம். இதனால் ஹாங்காங்கின் சுதந்திர சுயாட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று ஜனநாயக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சட்டத்தால், ஒரு நாடு இரண்டு அமைப்பு என்ற சீன-ஹாங்காங்கின் ஆட்சி நடைமுறை இனி ஒரே நாடு, ஒரே அமைப்பு என்ற நிலைக்கு மாறியுள்ளது. இந்நிலையில், ஹாங்காங்கில் செப்டம்பர் 11-அம தேதி பொதுத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஹாங்காங் சட்டசபையில் உள்ள மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 35 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

hong kong,general election,postponed,1 year ,ஹாங்காங், பொதுத் தேர்தல், ஒத்திவைப்பு , 1 வருடம்

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த தேர்தலில் பங்கேற்க ஜனநாயகத்திற்கு ஆதரவான வேட்பாளர்கள் 12 பேருக்கு ஹாங்காங் அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தநிலையில், தற்போது கொரோனா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அடுத்தமாதம் நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக நிர்வாக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹாங்காங் அரசு தரப்பில் கூறுகையில், கொரோனா வேகமாக பரவுவதால் அடுத்த மாதம் நடைபெறவிருந்த தேர்தல் 1 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான மனநிலையுடன் மக்கள் இருப்பதால் தேர்தல் ஹாங்காங் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags :