Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு ஜாவா தீவில் பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் சேதம்

மேற்கு ஜாவா தீவில் பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் சேதம்

By: Nagaraj Sat, 26 Nov 2022 7:16:06 PM

மேற்கு ஜாவா தீவில் பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் சேதம்

இந்தோனேசியா: இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன.

கடந்த 21ம் தேதி ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால்பலர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து கொண்டு வருகிறது. இதற்கு முன்பு மேஜர் ஜெனரல் சுஹர்யான்தோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நிலநடுக்கத்திற்கு பலியானவர்களில் 3-ல் ஒரு பங்கினர் குழந்தைகள் என்று உறுதி செய்துள்ளார். 2,043 பேர் காயமடைந்து உள்ளனர்.

indonesia,houses,it is feared,may rise ,
இந்தோனேசியா ,வீடுகள், எண்ணிக்கை, அஞ்சப்படுகிறது, உயரக்கூடும்

இதனை அடுத்து 61,800 பேர் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என கூறியுள்ளார். 56,320 வீடுகள் சேதமடைந்தும், அவற்றில் 3-ல் ஒரு பங்கு வீடுகள் அதிக அளவில் மோசமடைந்தும் உள்ளது. மேலும் இதுதவிர, 31 பள்ளிகள், 124 வழிபாட்டு தலங்கள் மற்றும் 3 சுகாதார வசதி மையங்களும் நிலநடுக்கத்தில் சேதமடைந்து உள்ளன.


நிலநடுக்க பகுதிகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிபர் ஜோகோ விடோடோ நேரில் சென்று பார்வையிட்டார். வீடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் பாதிப்பை எதிர்கொள்ளும்படியான வீடுகள் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்று விடோடோ அவர்கள் பேசியுள்ளார். இருப்பினும், பலி எண்ணிக்கை இன்னும் உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

Tags :
|